சாம்பியன் RCB அணியின் உரிமையாளர் யார்..அவரின் சொத்து மட்டுமே இத்தனை கோடியா?
சாம்பியன் RCB அணி
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டின் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றுள்ளது. 2008ல் இருந்து ஆடி வரும் ஆர்சிபி அணி 18 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம் விராட் கோலியின் கனவு அகமதாபாத் மைதானத்தில் நினைவாகியது. கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகையை ஆர்சிபி அணிக்கு வழங்கப்பட்டது.
ஹினா நாகராஜனின் நிகர சொத்து
இந்நிலையில் ஆர்சிபி அணியின் உரிமையாளர் யார் அவரது சொத்து மதிப்பு என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2008ல் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் உரிமையாளராக விஜய் மல்லையா இருந்தார்.
அவர்தான் சுமார் 111 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் எடுத்திருந்தார். மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட 2வது அணியாக ஆர்சிபி இருந்தது. விஜய் மல்லையா மற்றும் அவரது நிறுவனங்களின் மீது எழுந்த புகார், கடன்களால் ஆர்சிபி அணியின் உரிமையை 2016ல் தவறவிட்டார்.
அவருக்கு பின் ஆர்சிபி அணியை தற்போதைய யுனைடெட் ஸ்பிரிட்ஸ் என்ற நிறுவனம் வாங்கியது. இந்நிறுவனம் இந்தியாவின் மிகப்பிரபலமான மதுபான நிறுவனமாகும். உலகளவில் அதிகளவு மதுபான உற்பத்தி செய்து வரும் நிறுவனங்களில் 3வது இடத்தில் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் இருந்து வருகிறது.
இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பிரத்மேஷ் மிஸ்ரா தலைமையில் தான் ஆர்சிபி அணி இருந்து வருகிறது. அந்தவகையில் பிரத்மேஷ் மிஸ்ராவின் நிகர சொத்து மதிப்பு சுமார் 11.95 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளதாம்.