தோல்வி அடைந்த லக்னோ அணி!! கே எல் ராகுலை மைதானத்திலேயே திட்டிய உரிமையாளர்.. வைரலாகும் வீடியோ..
ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் படுமோசமான தோல்வியை அடைந்தது. அணியின் கேப்டனான கே எல் ராகுல் டெஸ்ட் போட்டி ஆடுவது போல் பேட்டிங் செய்து, 33 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். அவரது மோசமான பேட்டிங்கால் தான் அந்த அணி வெறும் 165 ரன்கள் எடுத்தது என்று பலர் விமர்சித்தனர்.
அதுவும் மோசமான பவுளிங் இருந்தும் மோசமான ஃபீல்டிங்கும் தான் தோல்விக்கு காரணம் என்று ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கடும் அதிருப்தியில் இருந்தார். அவர் நேராக மைதானத்திற்குள் நுழைந்து கே எல் ஆர் ரகுலை சந்தித்து கடுமையாக பேசியுள்ளார். அவர் கைகளை ஆட்டி, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு பேசிய காட்சிகள் மைதானத்தில் இருந்து அனைத்து கேமராக்களிலும் பதிவானது.
பொதுவாக ஒரு அணி தோல்வி அடைந்தால் அறைக்குச் சென்ற பின்னரே உரிமையாளரோ அல்லது பயிற்சியாளரோ அது குறித்து அணியின் வீரர்கள் மற்றும் கேப்டன் உடன் விவாதம் செய்வார்கள். ஆனால், இங்கு லக்னோ அணியின் உரிமையாளர் கோயங்கா, நேரடியாக மைதானத்திற்கே வந்திருக்கிறார்.
Unprofessional and unacceptable behaviour of Goenka with talented #KLRahul pic.twitter.com/iDWVtjiSpt
— Ashish (@error040290) May 9, 2024
வந்ததும் நூற்றுக்கணக்கான கேமராக்கள் இருப்பதையும் கூட யோசிக்காமல், கே எல் ராகுல் போன்ற ஒரு அனுபவ இந்திய வீரரை கடுமையாக பேசியிருப்பது விமர்சனத்தை கிளப்பியுள்ளது. என்னதான் கே எல் ராகுல் மோசமாக ஆடியிருந்தாலும் கூட, அது குறித்து அறையில் தான் அவர்கள் பேசியிருக்க வேண்டும் என பலரும் கருத்து கூறி வருகின்றனர். குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் பகிரப்பட்டு லக்னோ அணியின் உரிமையாளரை கடுமையாக தாக்கி விமர்சித்து வருகிறார்கள்.
KL Rahul 😁
— James Stanly (@JamesStanly) May 8, 2024
pic.twitter.com/oA7hKi0zGz