நடிகை ஸ்ரீதேவி குறித்து வெளிவந்த ஷாக்கிங் தகவல்!! பிரபல நடிகை போட்டுடைத்த உண்மை
கோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்தியளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவருடைய மரணம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள நடிகை ஸ்ரீதேவி குறித்து அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ஜெயப்ரதாவிடம் நடிகை ஸ்ரீதேவி நடந்துகொண்ட விதம் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், படப்பிடிப்பு தளத்தில் மட்டுமே ஸ்ரீதேவி ஜெயப்ரதாவிடம் நன்றாக பேசுவாராம். மிகவும் நெருக்கமான தோழியை போல் பலகுவாராம். ஆனால், அதன்பின் வேறு சினிமா விழாக்களில் சந்திக்க சந்தர்ப்பம் வந்தால் கூட ஜெயப்ரதாவிடம் முகம் கொடுத்து கூட பேச மாட்டாராம் ஸ்ரீதேவி.
ஜெயப்பிரதா ஒரு இடத்தில அமர்ந்து இருந்தார், ஸ்ரீதேவி அவரிடம் இருந்து தூரமாக சென்று தான் அமருவாராம். இப்படி பலரிடமும் ஸ்ரீதேவி நடந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.
எந்த படங்களில் ஒன்றாக சேர்ந்த நடித்திருந்தாலும் கூட, ஒவ்வொரு படத்திற்கும், அந்தந்த இயக்குனர் அல்லது தயாரிப்பாளர்கள் வந்து, இவர் தான் ஜெயப்பிரதா என ஸ்ரீதேவியிடம் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டியது இருந்ததாம்.
ஆனால், ஸ்ரீதேவி அவரை பார்த்ததும் உடனே பேச மாட்டாராம். இந்த விஷயத்தை பேட்டி ஒன்றில் ஜெயப்பிரதா கூறியுள்ளார் என இணையத்தில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.