சூர்யாவை திருமணம் செய்ய இது தான் காரணம்!! வெளிப்படையாக பேசிய ஜோதிகா..
ஜோதிகா கடந்த 2006 -ம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
தற்போது ஜோதிகாவும் சினிமாவில் பிஸியாக வலம் வருகிறார். இப்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்ரீகாந்த் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் ஜோதிகா, சூர்யா குறித்து பேசிய விஷயம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர், சூர்யா நடித்திருக்கும் கங்குவா திரைப்படத்தின் காட்சிகளை பார்த்தேன். சிறப்பாக இருக்கிறது, ரசிகர்களுக்கு புதிய அனுப்புவதை கொடுக்கும்.
சூர்யா ஒரு அற்புதமான மனிதர், 200 சதவீதம் உழைப்பை படத்திற்காக கொடுத்து இருக்கிறார். நான் அவரை திருமணம் செய்ய இது கூட காரணமாக இருக்கலாம்.
சினிமா மட்டுமின்றி கணவனாகவும், தந்தையாகவும் 200 சதவீத ஈடுபாட்டை காட்டக்கூடியவர் என்று ஜோதிகா கூறியுள்ளார்.