திருமணம் செய்யும் போது பயமா இருந்துச்சு!! சூர்யா மனைவி நடிகை ஜோதிகா கூறிய உண்மை..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து பாலிவுட் வரை சென்று நடித்து வருபவர் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்த ஜோதிகா குடும்பம் குழந்தை என்று பார்க்க சினிமாவில் இருந்து விலகினார். அதன்பின் பல ஆண்டுகள் கழித்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காதக் தி கோர் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் தொகுப்பாளர் கோபிநாத் பேட்டியில் கலந்து கொண்டு நடிகையானது முதல் திருமணம், குழந்தை, ரீஎண்ட்ரி கொடுத்தது வரை பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் அஜித் என்னுடைய ஸ்பெசல் நடிகர் என்றும் சிம்புவுடன் நான் இன்னும் டச்சில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் பேசிய நடிகை ஜோதிகா, வட இந்தியாவில் இருந்து தமிழில் நடிகையானது ஒரு சவாலை போல் தமிழ் நாட்டு குடும்பத்தில் மருமகளாவது ஒரு சவால், அப்போது பயமும் கவலையும் என்ன என்று கோபிநாத் கேட்டுள்ளார்.
அதற்கு, பயம் கண்டிப்பாக இருந்தது. எல்லா பெண்களுக்கு பயம் இருக்கும். அதற்கு ஜோதிகா, ஜாதி எதுவுமே இல்லை என்று கூறிவிட்டு இருக்கு, ஆனால் எல்லா பெண்களுக்கு கல்யாணம் செய்து போகும் பெண்களுக்கு பயம் இருக்கும். எனக்கும் பயம் இருந்தது, தமிழ் தெரியாது. அம்மா தான் வீட்டில் இருந்தார்கள், அவர்கள் தான் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள்.
இப்போது கூட மும்பையில் அம்மாவை பார்க்கும் போது 30 நிமிடம் பேசுவேன். திருமணத்திற்கு பின் கூட ஷூட்டிங்கிற்கு அவர் தான் சாப்பாடு எடுத்து வருவார்கள். இது தான் என் வீடு என்று நானே நினைத்து தான் உள்ளே சென்றேன். சூர்யா பலமுறை எனக்கும் என் குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பார் என்று ஜோதிகா தெரிவித்திருக்கிறார்.
சூர்யா அப்போதும், இப்போதும் பார்க்கும் போது என்ன சொல்ல தோன்றும் என்ற கேள்விக்கு, ஏன் இந்த ஹீரோ பேசமாட்றாரு? இப்போது கூட ஏன் என் கணவர் அதிகமாக பேசமாட்றார் என்று கேட்பேன். இருவரில் யார் பிரபோஸ் செய்தோம் என்று தெரியாது. 5 வருட நண்பர்களாக இருக்கும் போது அது எப்படி காதலானது என்று எனக்கு நியாபகம் இல்லை என்றும் என் மகள் கூட இதை கேட்பார் என்றார் ஜோதிகா.