8 வருடமாக வாய்ப்பில்லை!! ஜோதிகா - சூர்யாவின் ரீல் மகள் ஸ்ரேயா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா..
தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா. அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததை அடுத்து பில்லு கேமர், நிர்மலா கான்வெண்ட் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் வாய்ப்பில்லாமல் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். இடையில் புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருவார்.
சமீபத்தில் 27 வயதை எட்டியிருக்கும் ஸ்ரேயா சர்மா, நள்ளிரவு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ள புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். தற்போது அடக்கவுடக்கமான ஆடையில் A Vijayanagara Architectural Marvel - Swamy Veerabhadra Deva இடத்திற்கு சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் ஸ்ரேயா சர்மா.





