கேரவனில் திடீரென நுழைந்து சட்டையை கழட்டிய உதவி இயக்குநர்!! அதிச்சியான காஜல் அகர்வால்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை காஜல் அகர்வால், உதவி இயக்குநர் செய்த ஒரு சம்பவத்தை பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

காஜல் அகர்வால்
அதில், நான் ஒரு படத்தின் படப்பிடிப்பு சூட்டுக்காக போயிருந்தேன். அப்போது இடைவேளை என்பதால் சூட்டின் கேரவனில் தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஒருவர் கதவை கூட தட்டாமல் திடீரென கேரவனுக்குள் வந்துவிட்டார். அந்த நபர் சாதாரண ரசிகர் போல் வாழ்த்து சொல்ல வரவில்லை.
தன் முன் தன்னுடைய சட்டையை கழட்டி மார்பில் குத்தியிருந்த டாட்டூவை காட்டினார். அந்த டாட்டூவில் இருந்தது என் பெயர் தான். இந்த சம்பவத்தை எதிர்ப்பார்க்காமல் அதிர்ச்சியடைந்தேன்.

திடீரென ஒருவர் வந்து தன் முன் சட்டையை கழட்டுவதை பார்த்து பயப்பட்டாலும், பின் நடந்தது தனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸாக இருந்தாலும் இது எனக்கு பிடிக்காத அதிர்ச்சி என்று கூறியிருக்கிறார் காஜல்.
மேலும் எனக்கு ரசிகர்கள் மீது இப்போதும் எப்போதும் அன்பும் மரியாதையும் இருக்கிறது. ஆனால் ஒரு பெண் தனியாக இருக்கும் இடத்திற்கு அனுமதியில்லாமல் நுழைவது தவறு. யாராக இருந்தாலும் மற்றவர்களின் தனிப்பட்ட உரிமையையும் மதிக்க வேண்டும். ரசிகர் என்ற பெயரில் எல்லை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதே சமயம் தான் கோபப்படாமல் அமைதியாக அந்த உதவி இயக்குநரை எச்சரித்து வெளியேற்றியதாகவும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.