அனிருத் - காவ்யா மாறன் கல்யாணம்!! கண்ணதாசன் மகன் கோபி சர்ச்சை பேச்சு..
அனிருத் - காவ்யா மாறன்
இந்திய திரையுலகில் டாப் இசையமைப்பாளராக உருவெடுத்து வருபவர் தான் அனிருத் ரவிச்சந்திரன். தற்போது பாலிவுட், டோலிவுட், கோலிவுட் உள்ளிட்ட மொழிகளில் டாப் நடிகர்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அனிருத்தும், காவ்யா மாறனும் காதலித்து வருவதாகவும் அவர்களின் திருமணத்திற்கு ஒரு வீட்டாரும் சம்மதம் கொடுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியது. இதுகுறித்து பலர் கருத்துகளை பகிர்ந்து வரும் நிலையில், கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கண்ணதாசன் மகன்
அதில், ஒருவரின் திருமணத்தின்போது அபசகுணமாக பேசக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், நீங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறதா பேசிகொல்லும் அப்பெண்ணுடய குடும்பம் பெரிய திராவிட பாரம்பரிய குடும்பம். அவங்க ராகு காலத்திலேயே தாலிக்கட்டுவாங்க.

கடவுள் இல்லன்னு சொல்ற குடும்பம், மன்னிக்கவும் இந்துக் காவுள் மட்டும் இல்லை என்று சொல்லும் குடும்பம். மணப்பெண்ணின் தாத்தா முரசொலி மாறன், பெரிய தாத்தா கலைஞர் உட்பட அனைவரும் அப்படி சொல்லித்தான் தமிழர்களை எழுவது வருஷமா ஏமாத்தினாங்க.
சென்னைக்கு வரும்போது சல்லி காசு இல்லாம வந்த குடும்பம், ஆனால் இன்னைக்கு உலக பணக்காரர்கள் வரிசையில் ஒருவர். அம்பானி மாதிரி, டிவிஎஸ் மாதிரி உழைச்ச சொத்து இல்ல. அனிருத் தம்பி எல்லாம் சுருட்டியது.
ஐபிஎல் டோர்னமெண்ட்ல காவ்யா மாறனுடைய அணி தோல்வியடைந்த போது, பொதுமக்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்த கமெண்டுகளை எல்லாம் நீங்க படிச்சிருப்பீங்க, கடுமையாக குடும்பத்தையே கழிவி ஊத்தி இருப்பாங்க. உங்க குடும்பம் ஐதீக குடும்பம், பார்த்துக்கோங்க என்று கூறியிருக்கிறார்.