சித்தார்த்-ஆ வேண்டவே வேண்டாம்னு ஒதுக்கிய இயக்குனர்!! விஜய் சேதுபதியை தூக்கிவிட்ட தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக திகழ்ந்து வரும் சி வி குமார், திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார். அந்தவகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் முதன்முதலில் இயக்குனராகி மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த பிட்சா படத்தினை சிவி குமார் தயாரித்திருந்தார். அப்படத்தின் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதில், கார்த்திக் சுப்புராஜ் என்னிடம் முதலில் ஜிகர்தண்டா படத்தின் கதையை கூறினார். படத்தின் பட்ஜெட் அதிகமாக போகும் என்பதால் வேறொரு கதையை கேட்டேன். பின் தான் பிட்சா கதையை அனுப்பி வைத்ததும் எனக்கு பிடித்து போனதால் அட்வான்ஸ் கொடுத்து படத்தை ஆரம்பிக்க சொல்லிவிட்டேன். நடிகர்கள் நடிகைகளை தேர்வு செய்வதில் முதலில் வைபவ், பிரசன்னா நடிகர்களாக கேட்டு முடியாமல் போக விஜய் சேதுபதியை கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்து வைத்திருந்தேன்.
அதேபோல் நடிகை ஓவியா தான் முதல் கேட்டோம், முடியாமல் போக ரம்யா நம்பீசன் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன்பின் ஞானவேல் ராஜாவை சந்தித்து பிட்சா கதையை சொல்லி படம் எடுக்க போகிறேன் என்று சொன்னேன். படத்தில் கதாநாயகனாக நடிக்க சித்தார்த் இடம் பேசுகிறேன் என்று ஞானவேல் ராஜா சொன்னார்.
அதன்பின் கார்த்திக் சுப்புராஜிடம் சொன்ன இரு நாட்கள் கழித்து பார்ட்டி நடந்த போது, அவர் சீனியர் நடிகர், கதையில் கரெக்ஷன் சொல்லுவார் என்றும் விஜய் சேதுபதி ஓகே என்றும் கூறினார். அதன்பின் தான் விஜய் சேதுபதியை புக் செய்து படத்தை முடித்தோம். ஒரு இயக்குனருக்கு பிடிக்கவில்லை என்றால் நான் எப்படி அவரை கட்டாயப்படுத்துவது என்று எடுத்தோம் என்று தயாரிப்பாளர் சிவி குமார் தெரிவித்துள்ளார்.