கார்த்தி குடும்பத்துக்கு இது ஒன்னும் புதுசு இல்ல.. கிண்டல் செய்த நடிகை கஸ்தூரி..
திருப்பதி லட்டு
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாகவே பெரிய விவகாரமாக மாறியிருக்கிறது திருப்பதி லட்டு விவகாரம்தான். இதுகுறித்து பலர் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நடிகர் கார்த்தி மெய்யழகன் படத்தின் பிரமோஷனுக்காக ஆந்திராவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கார்த்தி, சிரித்துக்கொண்டே, இந்த விஷயம் சென்ஷேஷ்னலான ஒன்று, லட்டு குறித்து பேச வேண்டாம் என்று கூறியிருந்தார். இது பவன் கல்யாணுக்கு தெரியவர, எதிர்வினையாக கார்த்தியை கண்டித்து பேசினார்.
இது என்ன வம்பா போச்சு என்கிற தொனியில் கார்த்தி, பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் அவர் மீது என்ன தவறு இருக்கிறது என்றும் எதற்கு கார்த்தி மன்னிப்பு கேட்டார் என்றும் தமிழ் நாட்டு ரசிகர்கள் கொந்தளித்தனர்.
கஸ்தூரி
இந்நிலையில் நடிகை கஸ்தூரி, ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கடுமையான எச்சரிக்கைக்கு பின் கார்த்தி மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தான் ஒரு வெங்கடாசலபதியின் பக்தர் என்று கூறியிருக்கிறார்.
தெலுங்கில் அவருக்கு ரசிகர்கள் இருப்பதாலும் படம் விரைவில் ரிலீஸாக இருப்பதாலும் நகைச்சுவை என்ற பெயரில் வந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு கார்த்தி முயற்சித்தார். ஆனால் அது முடியாமல் தோல்வியடைந்தது.
வேறு விதத்தில் கார்த்தி தொகுப்பாளினியை எச்சரித்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. அந்த கேள்விக்கு கருத்து சொல்லி சர்ச்சையாக்கக்கூடாது என்று நினைத்து பலரை காயப்படுத்தியிருக்கிறார். சனாதன தர்மம் குறித்து கார்த்தியின் குடும்பம் சிக்குவது இது ஒன்றும் புதிதல்ல.
சபரிமலை குறித்து அப்பா சிவக்குமார், கோயில்கள் குறித்து அண்ணி ஜோதிகாவின் எதிர்ப்பு போன்ற கருத்துக்கள் முக்கியமானது என்று கஸ்தூரி கூறியிருக்கிறார்.