அந்த விஷயத்திற்காக நடிகைகள் படுக்கைக்கு வரணுமா.. சினிமாவை விட்டு விலகவும் தயாராகும் கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh
By Karthick Raja
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் மற்றும் சைரன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
படவாய்ப்பு தருவதாக கூறி நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
அவர் அளித்த பேட்டியில்," சில நடிகைகள் திரைத்துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகளை குறித்து என்னிடம் கூறியுள்ளனர். ஆனால் எனக்கு இதுபோன்ற தவறான சம்பவங்கள் என் வாழ்வில் நடக்கவில்லை.
மேலும் படவாய்ப்பு தருவதாக கூறி என்னிடம் தவறான கண்ணோட்டத்தில் நெருங்கி பாலியல் தொந்தரவு கொடுத்தால், அந்த படவாய்ப்பை உதறி தள்ளி விடுவேன்.திரைத்துறையில் இருந்து விலகி வேறு தொழில் செய்வேன் " என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். கீர்த்தியின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.