பிறந்தநாள் கொண்டாட வேண்டிய நடிகை தூக்கிட்டு தற்கொலை! கொடுமைப்படுத்திய கணவரால் புலம்பும் பெற்றோர்..

Indian Actress
By Edward May 14, 2022 05:15 AM GMT
Edward

Edward

Report

சமீபகாலமாக சினிமா பிரபலங்களின் தற்கொலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பாலிவுட்டில் இருந்து டோலிவுட் வரை நட்சத்திரங்களின் தற்கொலை செய்திகள் மர்மமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.

அப்படி கேரளாவை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோட்டையை சேர்ந்த சஹானா என்ற 21 வயதே ஆன இளம் நடிகை நகைக்கடை விளம்பரங்களில் நடித்து வந்தவர்.

19 வயதிலேயெ திருமணம் செய்து வைத்து ஒன்றரை ஆண்டுகளாகியுள்ளது. கணவருடன் வசித்து வந்தவர் திடீரென தற்கொலை செய்ததை அடுத்து உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள் போலிசார்.

சஹானாவின் கணவர் சஜாத் விளம்பரத்தில் வரும் பணத்தினை கேட்டு மிரட்டி கொடுமைப்படுத்தியதாக அவரது பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

மேலும் வீட்டிற்கு பெற்றோர் உறவினர் யாரும் வரக்கூடாது போனில் பேசக்கூடாது என்று கூறி துன்புறுத்தியதாகவு விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்ததால் பிறந்த நாள் அதுவும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் சஹானா.

மர்மமாக இருக்கும் இந்த வழக்கினை போலிசார் கணவரை கைது செய்து தீவிரமான விசாரணை செய்து வருகிறார்கள்.