இத்தனை வயதாகியும் ஏன் திருமணம் செய்யவில்லை! பல ஆண்டு உண்மையை கூறிய நடிகை கோவை சரளா!
சினிமாவில் காமெடி நடிகர்களுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பார்கள். ஆனால் அந்த அளவிற்கு ஒரு சில காமெடி நடிகைகளே தமிழ் சினிமாவில் பேசப்பட்டனர்.
அந்த வரிசையில் ஆச்சி மனோரம்மாவிற்கு பிறகு அந்த இடத்தினை பிடித்தவர் நடிகை கோவை சரளா. 250 படங்களுக்கும் மேல் தற்போது வரை படங்களில் நடித்து வரும் கோவை சரளா, வெள்ளிரதம் என்ற படத்தில் 15 வயதில் அறிமுகமாகினார்.
இதையடுத்து பாக்கியராஜின் 65 வயது தாயாக சின்னவீடு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில், இத்தனை வயதாகியும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற காரணத்தை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார்.
கோவை சரளாவிற்கு 4 அக்காவும் 1 தங்கையும் இருந்துள்ளனர். அவர்களின் நாள்வரின் வாழ்க்கையை செட்டில் செய்வதற்காக உழைத்து வந்தார்.
இதையடுத்து அவர்களின் குழந்தைகளை தன்னுடைய குழந்தைகள் போல பார்த்து வளர்த்து வந்துள்ளார் கோவை சரளா.