மாலத்தீவு அவுட்டிங்..விஜே பிரியங்கா, பாவ்னி திருமணத்திற்கு வராத மாகாபா ஆனந்த்!! இதுதான் காரணம்?
மாகாபா ஆனந்த்
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா தேஸ்பாண்டே இருவரும் தங்களின் காமெடி கலந்த ஸ்டைலில் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
விஜே பிரியங்கா, பாவ்னி
விஜே பிரியங்கா, டிஜே வசி என்பவரை திடீரென நேற்று ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணத்திற்கு விஜய் டிவி பிரபலங்கள் பலரும் வந்த நிலையில் பிரியங்காவின் நெருங்கிய நண்பரும் தொகுப்பாளருமான மாகாபா ஆனந்த் பங்கேற்கவில்லை.
அதேபோல் சில நாட்களுக்கு முன் நடந்த அமீர் - பாவ்னி திருமணத்திற்கும் மாகாபா ஆனந்த் வரவில்லை. ஏன் வரவில்லை என்று மாகாபா ஆனந்தின் சமூகவலைத்தள பக்கங்களில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர்.
ஏன் வரவில்லை
மாகாபா ஆனந்த் ஏன் வரவில்லை என்ற காரணம் வெளியாகியுள்ளது. அதாவது, இரு குழந்தைகள் இருக்கும் மாகாபா ஆனந்த் - சூசன் தன்னுடைய திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். அதற்காக மாலத்தீவிற்கு தன்னுடைய மனைவியுடன் சென்றுள்ளதால் தான் மாகாபா ஆனந்த் செல்லவில்லையாம்.
அதேபோல் பாவ்னி - அமீர் திருமணத்திற்கும் செல்லாததற்கு காரணம் இதுதான் என்று கூறப்படுகிறது. ஆனால் ரசிகர்கள் பலர், இவர்களுக்கு இடையில் ஏதாவது பிரச்சனை இருக்கும் என்று இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
