விவாகரத்துக்கு பின் கையில் போட்டுக்கொண்ட டேட்டூ.. இரண்டாம் திருமணத்திற்கு பிறகு வெளியான புகைப்படம்..
Serials
Gossip Today
By Edward
சின்னத்திரை நடிகையாக திகழ்ந்து சமீபத்தில் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் நடிகை மகாலட்சுமி. அவர்களின் திருமணம் தான் தற்போது கோலிவுட்டில் பேசு பொருளாக இருந்து வருகிறது.
இரு ஆண்டுகளாக காதலித்து வந்த மகாலட்சுமி - ரவிந்தர் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை மகாலட்சுமி கையில் டேட்டூ ஒன்றினை போட்டிருக்கிறார்.
யார் பெயரை போட்டுள்ளார் என்று பார்க்கையில் அவரது மகன் சச்சின் என்ற பெயரை பதிந்திருக்கிறார் மகாலட்சுமி.
முதல் கணவரை பிரிந்த பிறகு பெற்றோருடன் வாழ்ந்து வந்த மகாலட்சுமி தனது மகனின் பெயரை பச்சை குத்தியிருக்கிறார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.