ஊரடங்கால் ஏற்பட்ட மாற்றம்! நயன்தாரா - விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு?

rowdy nayantara rocky vigneshshivan vasanthravi
By Edward Jun 02, 2021 04:38 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுத்தவர். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நயன் தாரா தற்போதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் படப்பிடிப்பினை முடித்து காதலருடன் இணைந்துள்ளார்.

இதனை அடுத்து நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நயன் தாரா தயாரிப்பிலும் காதலருடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி தற்போது ராக்கி என்ற படத்தில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நயன் தாரா விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் பரவலாக அதிகரிப்பதை எண்ணி நயன் - விக்னேஷின் ரெளடி நிறுவனம் ராக்கி படத்தினை ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாம்.

இதுகுறித்து படக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிக்கவுள்ளார்களாம். இப்படத்தில் இயக்குநர் பாரதிராஜாவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.