திருமணத்திற்கு பின் ஆளே மாறிய நயன்தாரா? இப்படியொரு போஸ்-ல் கணவர் எடுத்த புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. ஐய்யா படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் டயானா என்ற பெயரை நயன் தாரா என்று மாற்றிக்கொண்டார்.
சினிமா படங்கள்
இப்படத்திற்கு பிறகு சந்திரமுகி, கஜினி, வல்லவன், பில்லா போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
தொடர்ந்து விஜய், அஜித் படங்களில் நடித்து வந்த நயன் தாரா சிம்பு, பிரபுதேவாவுடன் காதலில் இருந்து சில காரணங்களால் பிரிந்தார். இதன்பின் மார்க்கெட் இழக்கும் நிலையில் இருந்த நயன் தனி ஒருவன், மாயா, நண்பேண்டா போன்ற படங்களில் நடித்தார்.

விக்னேஷ் சிவனுடன் காதல்
அப்போது அவருக்கு ஆறுதலாக இருந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தின் போது இருவருக்கும் நட்பு காதலாக மாறி 7 வருடங்களாக லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
சமீபத்தில் யாரும் எதிர்ப்பாராத விதமாக ஜூன் 9ல் மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு அம்மாவை சந்தித்து ஆசி பெற்ற பிறகு தாய்லாந்து ஹனிமூன் சென்றார் நயன் தாரா.
திருமணத்திற்கு பின்
அங்கு எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு வந்த விக்னேஷ் சிவன், நயன் தாராவை இப்படி யாரும் பார்த்திராத அளவிற்கு அப்படியொரு போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

