திருமணத்திற்கு முன்பே வருங்கால மனைவி வரலட்சுமிக்கு மும்பையில் பங்களா!! ஷாக் கொடுத்த சரத்குமாரின் மருமகன்..
நடிகர் சரத்குமாரின் மகளாக போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை வரலட்சுமி சரத்குமார். இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த வரலட்சுமி, தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் வில்லியாகவும் நடிக்க ஆரம்பித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
வெப் தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த வரலட்சுமி, மும்பையை சேர்ந்த கேலரி ஆர்ட்டிஸ்ட் Nicholai Sachdev என்பவரை 14 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார். சமீபத்தில் இருவரும் நிச்சயத்தார்த்தம் செய்து கொண்ட நிலையில் பலரும் கலாய்த்து விமர்சனம் செய்து வந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் வரலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், என் அப்பா கூட தான் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார், அவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார். நிக்கை மக்கள் எப்படி பேசுகிறார்கள் என்று நான் பார்த்திருக்கிறேன்.
அவர் என் பார்வையில் அழகானவர், எங்களை பற்றி நெகட்டிவ் கருத்துக்கள் வெளியிட்டு வருபவர்கள் பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. நான் எதற்காக பதில் சொல்ல வேண்டும்? என்று பதிலடி கொடுத்தார். இந்நிலையில் வருங்கால மனைவி வரலட்சுமிக்கு நிக்கோலய், மும்பையில் இருவரின் பெயரில் ஒரு வீடு வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
You May Like This Video