நம்பி இருந்தேன், பாய் ஃபிரெண்ட் ஏமாற்றிவிட்டான்!! காதல் ரகசியத்தை உடைத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..
சமீபகாலமாக நடிகை நிவேதா பெத்துராஜ் பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு பேசுபொருளாக மாறியிருக்கிறது. நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடியாக நடித்த போது நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் 50 கோடியில் பங்களா வாங்கி கொடுத்தார் என்ற செய்தியை பிரபல விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க நிவேதா பெத்துராஜ் இதனால், எனது குடும்பத்தினரும் நானும் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறி ஒரு பதிவினை போட்டிருந்தார்.
இந்த சம்பவம் நடந்து முடிந்த சில மாதங்களாகிய நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியொன்றில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பகிர்ந்துள்ளார். நெகட்டிவாக எதையாவது நினைத்தால் அது அப்படியே நடந்துவிடும். என் பாய்ஃபிரெண்ட் என்னை ஏமாற்றிவிடுவான், சீட் பண்ணப்போறான் என்று நினைத்தேன்.
இல்லை அவன் நல்லவன் என்றும் நினைத்தான். ஆனால், உடனடியாக பாய் ஃபிரெண்ட் ஏமாத்திட்டான். இப்போது நான் வைத்திருக்கும் கார் எப்படி இருக்கணும் என்ன கலர்ல இருக்கணும் என்று எப்போதோ நினைத்திருக்கிறேன்.
வருங்காலத்தில் தன் கார் எப்படி இருகணும் என்பதை கூட நினைத்து வைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நிவேதா பெத்துராஜ். பேட்டியில் அவர் கூறிய பாய் ஃபிரெண்ட் யாராக இருக்கும் என்று சோசியல் மீடியாவில் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஏமாற்றியது யாரா இருக்கும் 💔 pic.twitter.com/yGqZS2jjqm
— முத்து (@Muthuhere3) June 29, 2024