அண்ணாமலை ரஜினிகாந்த் ரேஞ்சிக்கு சவால் விட்ட கதிர்.. மாட்டிக்கொண்ட முல்லை அக்கா..

Serials
By Jai Aug 17, 2022 10:45 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அண்ணன் தம்பிகளுக்கு இடையில் தற்போது பிரச்சனைகள் ஆரம்பிக்க துவங்கிய முதல் சம்பவமே கதிர் - முல்லை வீட்டைவிட்டு வெளியேறியது தான். பணப்பிரச்சனையால் வெளியே வந்த கதிர் - முல்லை தனியாக ஒரு சாப்பாட்டுக்கடையை ஆரம்பித்துள்ளனர்.

ஸ்லோவாக சென்ற சீரியலில் தற்போது முல்லையின் அக்கா இடையில் புகுந்து சவால் விட்டுள்ளார். அண்ணாமலை படத்தில் சூப்பர் ஸ்டார் எப்படி அசோக்கிடம் சவால் விட்டு பேசி உயரத்தை தொடர் உழைப்பாரோ அதே காட்சியை போன்று கதிர், முல்லை அக்காவிடம் சவால் விட்டு பேசியுள்ளார்.

அண்ணாமலை படத்தையே மிஞ்சிடுவாரோ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.