அண்ணன் உசுரவிட வைராக்யம் தான் முக்கியமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் எடுத்த முடிவு..

Serials
By Edward Jun 15, 2022 10:43 AM GMT
Edward

Edward

Report

தொலைக்காட்சி தொடர்களில் மக்கள் அனைவரும் குடும்பமாக பார்க்கக்கூடிய சீரியல்கள் கவர்ந்து வருகிறது. அதிலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ஒருசில சீரியல்கள் மிகவும் கவர்ந்து வருகிறது. அப்படி பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல்

அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் முல்லைக்காக மருத்துவத்தில் செய்த பணத்தினால் குடும்பத்தில் சண்டை நடந்தது. இதற்கு நாங்கள் தான் காரணம் என்று கதிர் முல்லை கூட்டிக்கொண்டு வீட்டினை விட்டு வெளியேறுகிறார்.

இரவு நேரத்தில் கதிர், முல்லை என்ன செய்வார்கள் என்ற ஏக்கத்தில் இருந்த மூர்த்திக்கு ஆர்ட் அட்டாக் வந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த விசயம் தெரிந்த கதிர் முல்லை மருத்துவமனைக்கு சென்று அழுதுள்ளனர்.

கதிரின் வைராக்யமான முடிவு

கதிர் முல்லையிடம், தனம் சென்று நாங்கள் வீட்டில் இருக்கிறோம் என்று கூறினால் அண்ணன் சரியாகிவிடுவார் என்று கூறியுள்ளார். என்னதான் ஆனாலும் சரி நான் என்னுடைய முடிவில் வைராக்கியத்தில் இருப்பேன் என்ற அளவிற்கு முடியாது அண்ணி சொன்னது சொன்னது தான் என்று கூறியுள்ளார்.

கோபத்தில் தனம் இருவரையும் இங்கிருந்து வெளியே போக சொல்கிறார். இப்படியொரு காட்சியால் சீரியல் மக்கள் மத்தியில் அடுத்து கதிர் முல்லை என்ன செய்வார்கள் என்று யோசித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் சொந்த அண்ணனை விட வைராக்யம் தான் முக்கியமா கதிர்? என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.