தீபிகா படுகோனை மறைமுகமாக அசிங்கப்படுத்திய நடிகையின் தாய்! ஆடையால் ஏற்பட்ட சம்பவம்
பாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி முன்னணி நடிகைகள் என்ற இடத்தினை டாப் 5 வரிசையில் வகித்து வருபவர்கள் நடிகை தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா. அக்கா, தங்கையாக வளம் வரும் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தும் வந்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா கருப்பு நிற ஆடையில் புகைப்படம் ஒன்று வெளியிட்டு இணையத்தில் பரவி வைரலானது. இப்புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் இந்த ஆடை ஏற்கனவே தீபிகா படுகோனே போட்டு புகைப்படத்தை வெளியிட்டாரே என்று குறிப்பிட்டு வந்தனர்.

இரண்டும் ஒரே ஆடையில்லை என்று நடிகை பிரியங்கா சோப்ராவின் தாயார் மது சோப்ரா கூறியுள்ளார். பார்வை இல்லாதவர்கள் தான் இரண்டும் ஒரே மாதிரி இருப்பதாக கூறுவார்கள். பிரியங்கா எப்போது உயர்தரமான சிறந்த ஆடைகளையே அணிவார் என்று குறிப்பிட்டு டிவிட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார்.
அவரது இந்த கருத்து தீபிகா படுகோனை மறைமுகமாக அசிங்கப்படுத்தி மட்டம் தட்டி பேசியிருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
Only a blind will think they are wearing same@outfit. Besides Pri always carries Haute couture better
— madhu chopra (@madhuchopra) May 26, 2021