11 வயதில் கால் டாக்ஸி டிரைவர் செய்த செயல்!! நடிகை பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்..
பிரியங்கா சோப்ரா
பாலிவுட் சினிமாவை தாண்டி ஹாலிவுட் ஹீரோயினாகவும் திகழ்ந்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கால் டாக்ஸியில் செல்லும்போது ஓட்டுநரின் கழுத்தை தன்னுடைய தாய் பிடித்து அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

தான் நடித்த தி பிளஃப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, 11 வயதில் நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், ஒருமுறை இரவு 11 மணியளவில் நானும் என் அம்மாவும் டெல்லியில் வாடகை காரில் சென்று கொண்டிருந்தோம்.
டிரைவர் திடீரென தெரியாத ஒரு பாதையில் காரை திருப்பினார். அடுத்த நிமிடமே என்னுடைய தாய், பின்னால் இருந்து அந்த டிரைவரின் கழுத்தை பிடித்து நெரித்துக்கொண்டிருந்தார்.

உடனே காரை மெயின் ரோட்டிற்கு திருப்பச்சொல்லி ஒரு அறை கொடுத்தார் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளை காப்பாற்ற பெற்றோர் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு தன்னுடைய தாயார் மது சோப்ரா ஒரு சிறந்த உதாரணம் என்று பிரியங்கா சோப்ரா கூறியிருக்கிறார்.