அஜித் கொடுத்த வாய்ப்பு!! அதுவே ஆப்பாக முடிந்துச்சு!! பிரபல தயாரிப்பாளர் வேதனை..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார், மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இடையில் பல விசயங்களை செய்து வரும் அஜித் பற்றி சினிமா பிரபலங்கள் சில அனுபவங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அப்படி பிரபல தயாரிப்பாளர் அஜித் பற்றி கூறியது தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
கோபாலா கோபாலா, தவசி, ஏப்ரல் மாதத்தில், செல்லமே போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வி ஞானவேல் சமீபத்தில் சிதரா லட்சுமணன் அவர்களின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் அஜித் பற்றி சில விசயக்களை பகிர்ந்துள்ளார். அஜித்திடம் நீங்கள் கால்ஷீட் கேட்கவில்லை, ஆனால், அஜித் உங்களுக்கு ஏதும் வாய்ப்பு (ஆஃபர்) தரவில்லையா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ஞானவேல், அஜித் எனக்கு ஆஃபர் பண்ணார், ஆனால் அந்த ஆஃபர் தான் எனக்கு ஆப்பாகிவிட்டது. ஜி படம் நாம பண்ணுவோம் என்று கேட்டதும் எனக்கு நம்மலுடன் தானே இருக்கிறார் எப்போவேனாலும் படம் பண்ணுவோம் என்ற தெனாவட்டு வந்துவிட்டது. நல்ல ஸ்கிரிப்ட்டுக்காக நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்.
அப்போது, சுத்தி இருக்கும் நண்பர்கள், அஜித்தை பார்க்க முடியாமல் இருக்கும் நண்பர்கள் என்னிடம், அஜித் வைத்து படம் பண்ணுங்கள் என்று கேட்டனர். அதற்கு நான் அவர் ரெடியா தான் இருக்கிறார், ஒரு கதை அமையனும் என்ற மாதிரி நான் சொல்லி இருக்கிறேன்.
அஜித் ஒரு பத்து பேருடன் இருக்கும் போது அந்த சிறந்த நண்பர்கள், நாங்கள் எல்லாம் உங்கள் பின்னாடியே நிற்கிறோம், எங்களை விட்டுட்டு ஞானவேலுக்கு படம் பண்ணனும்னு கேட்டுக்கிட்டே இருக்கிறீங்களாமே? என்று நீங்கள் ஊர் முழுவதும் சொல்லிட்டு இருக்கீங்களே என்று அஜித்திடம் கூறியிருக்கிறார்கள். என்று வி. ஞானவேல் கூறியிருக்கிறார்.