ரச்சிதா - தினேஷை பிரித்த நபர் இந்த நடிகர் தான்!! யாருன்னு நீங்களே பாருங்க...
சின்னத்திரை சீரியல்களில் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறியவர்கள் தினேஷ் - ரச்சிதா மகாலட்சுமி. 2015ல் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, கடந்த மூன்று ஆண்டுகளாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். பிக்பாஸ் 7 சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகர் தினேஷ்.
சிறப்பாக விளையாடி வரும் தினேஷ், வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், என் மனைவியோடு ஏற்பட்ட பிரச்சனை தான் என் வாழ்க்கையில் பெரிய இக்கட்டான சூழல் என்றும் நாங்கள் இருவரும் பிரபலங்கள் என்பதால் எங்களுக்கான அடையாளமும் அனைவருக்கும் தெரியும். கணவன் மனைவிக்கு ஏற்படும் சில பிரச்சனைகள் தான் எங்களுக்கும் நடந்தது என்று கூறியிருந்தார்.
இதுபற்றி பலரும் தினேஷுக்கு ஆதரவாக பேசி, ரச்சிதாவை சேர சொல்லி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தினேஷ் - ரச்சிதாவை பிரித்த நபர் யார் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அது வேறு யாரும் இல்லை தினேஷுடன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வரும் நடிகர் விஷ்ணு தானாம்.
தினேஷ் மீது ரச்சிதா போலிசில் புகார் கொடுப்பது உள்ளிட்ட பல விசயங்களில் ரச்சிதாவுக்கு துணையாக இருந்திருக்கிறாராம். விஷ்ணுவுக்கு ரச்சிதாவுக்கும் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்த போது இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். தோழிக்கு உதவி செய்யும் வகையில் ரச்சிதா தரப்பில் மட்டும் விளக்கத்தை கேட்டு அவருக்கு ஆதரவாக இருந்திருக்கிறார் விஷ்ணு.
தினேஷ் மீது பல புகார்களை அளித்த ரச்சிதாவின் பின்னணியில் விஷ்ணுவின் வேலை இருந்திருக்கலாம் என்றும் இதனால் தான் தினேஷ் பிக்பாஸ் வீட்டில் விஷ்ணு மீது கடும் கோபத்தில் திட்டுவதை பார்க்க முடிந்தது என்றும் கூறப்படுகிறது. தற்போது ஃபீஸ் டாஸ்க் நடந்து கொண்டிருப்பதாலோ என்னவோ தினேஷ் சற்று அமைதியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video