மணிமேகலை இதுக்கு பதில் சொல்லியே ஆகணும்!! வெளுத்து வாங்கிய ரவிந்தர்..
சமுகவலைத்தளங்களில் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது பிரியங்கா, மணிமேகலை பிரச்சனை. இவர்களின் இந்த பிரச்சனைகள் குறித்து விஜய் டிவி பிரபலங்கள், ரசிகர்கள், சினிமாத்துறையை சார்ந்தவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். தற்போது தயாரிப்பாளரும் விமர்சகருமான ரவிந்தர் அளித்த பேட்டியொன்றில் மணிமேகலையில் செயலை கண்டித்து ஒருசில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில், என்னோட கண்ணோட்டத்தில் பார்க்கும் போது ஏதோ, ஹேமா கமிட்டி, விஜய் மாநாடு, ஜெயம் ரவி பிரச்சனைகளை மறக்க வைத்த ஒரு அசாத்திய திறமை கொண்ட வீடியோதான் மணிமேகலை வீடியோ. சுயமரியாதை தாக்கப்பட்டதற்காக மணிமேகலை வீடியோ போட்டாரா? யாருக்காக இதை சொல்கிறார், இதற்கு என்ன காரணம்.
சுயமரியாதை போய்விட்டது என்று கூறி ஒரு குடும்பத்தின் மொத்த மரியாதையும் புடிங்கிவிட்டீர்கள். பிரியங்காவை கூறும் மணிமேகலை, அவர் பெயரை கூறி வெளியில் போகிறேன் என்று கூறியிருக்கலாம். அப்போது மக்கள் கொந்தளிச்சி இருக்கலாம்.
சுயமரியாதைக்கு போராடிய பெண், வைரலாகும் அந்த ஆடியோ எங்களுடையது அல்ல என்றும் நடந்த சண்டைக்கும் காரணம் இல்லை என்று மணிமேகலை ஒரு பதிவு போட்டிருக்கலாம். அந்த குறைந்தபட்ச நேர்மை வேண்டாமா? பிரியங்கா என்ன செஞ்சாங்க என்று சொல்லாமல் எக்ஸ் ஆங்கர் என்று சொல்லாமல், அபர் என்ன செய்தார் என்று கூறுங்கள்.
பிரியங்கா தன்னை தாழ்த்தி பலரை சிரிக்க வைத்த பெண். இவ்வளவு நாளா தமிழ் பொண்ணுன்னு பார்க்காம இப்போ மொழிப்பத்தி பேசுறீங்களே? தனிப்பட்ட கருத்து என்று சொன்ன மணிமேகலை பேட்டிக்கொடுத்து பேசியிருக்க வேண்டும், மணிமேகலை. பிரியங்கா ஒன்னுமே பண்ணலன்னுலாம் சொல்லமாட்டேன். பிரியங்கா உங்களுக்கு என்னவோ பண்ணாங்கன்னு தெரியாத போது நாங்கள் ஏன் உனக்கு சொல்லனும்.
நீங்கள் பத்தவெச்ச தீ உங்களுக்கும் எரியும். இதையே கோபி சார் பண்ணால் என்ன பண்ணி இருப்பீங்க, பிரியங்காவை எனக்கு தெரியாது, அவள் எப்படி வளர்ந்தால் என்று எனக்கு தெரியவில்லை. இதுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று ரவிந்தர் ஓப்பனாக பேசியிருக்கிறார்.