RCB அணி ரூ. 17 ஆயிரம் கோடிக்கு விற்பனை? காரணமே விராட் தான்!! பிளான் போட்ட அதானி..

Virat Kohli Royal Challengers Bangalore Gautam Adani Anant Ambani IPL 2025
By Edward Jun 11, 2025 06:30 AM GMT
Report

RCB அணி

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மே மாதம் நிறைவடைந்தது. 18 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக RCB அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. 18 ஆண்டுகளாக விராட் கோலியின் காத்திருப்புக்கு ஒரு பலன் கிடைத்ததாக எண்ணி அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.

அதற்கேற்ப விராட் கோலியின் மைதானத்திலேயே கண்ணீருடன் நின்ற காட்சி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. இதனை தொடர்ந்து பெங்களூருவில் நடந்த கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் பல விஷயங்கள் நடந்துள்ள நிலையில், ஆர்சிபி அணியை விற்பனை செய்ய அந்த அணியின் உரிமையாளர் முடிவெடுத்திருக்கிறார்.

விராட் கோலி

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடேட் என்ற நிறுவனம் தான் ஆர்சிபியின் உரிமையை பெற்றுள்ளது. பிரிட்டனை சேர்ந்த இந்நிறுவனம் விஜய் மல்லையாவிற்கு பின் 2016ல் ஆர்சிபி அணியை வாங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ரூ. 150 கோடி ஸ்பான்சர் வருவாயை விராட் கோலி மூலமாக ஆர்சிபி அணி பெற்று வந்தது.

ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்ற விராட் கோலி அடுத்த 2 சீசன்களுக்கு பின் விலகுவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்காக ரூ. 17 ஆயிரம் கோடியை ஆரம்ப விலையாக தற்போதைய உரிமையாளர் நிர்ணயித்துள்ளாராம்.

கவுதம் அதானி

அந்தவகையில், ஆர்சிபி அணியின் பங்குகள் விற்பனைக்கு வந்தால், அதை வாங்க கவுதம் அதானி ஆர்வமாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் அதானி நிறுவனம் ஏற்கனவே டபிள்யூபிஎல், ஐஎல்டி20 ஆகிய லீக்குகளில் அணிகளை வாங்கியிருக்கிறது.

2022ல் குஜராத் அணியை வாங்க அதானி தீவிரமாக இருந்தார். மேலும், கபடி, கோ-கோ உள்ளிட்ட அணிகளையும் அதானி நிறுவனம் வாங்கி முதலீடு செய்துள்ளது. அந்தவகையில் ஆர்சிபி அணி எவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை செய்தால் அதானி வாங்கி அடுத்த ஐபிஎல் தொடரில் கால் பதிப்பது நிச்சயம் என்று கூறப்படுகிறது.

ஆனால் ஆர்சிபி அணியை முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஜோடி வாங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.