பவுன்சர்ஸ்களுக்கு ரூ.30 லட்சம் சம்பளம்!! அட்டூழியம் செய்யும் நயன்தாரா!! பிரபலம் சொன்ன ரகசியம்..

Nayanthara Gossip Today Tamil Actress Tamil Producers
By Edward Jun 10, 2025 12:30 PM GMT
Report

நயன்தாரா

தென்னிந்திய சினிமாவை தாண்டி இந்தியளவில் தற்போது பிரபலமாகி வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நயன் தாரா, தமிழில் மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட படங்களில் நடித்து வருகிறார்.

பவுன்சர்ஸ்களுக்கு ரூ.30 லட்சம் சம்பளம்!! அட்டூழியம் செய்யும் நயன்தாரா!! பிரபலம் சொன்ன ரகசியம்.. | Reason Why Producers Avoided Nayanthara Salary

இப்படத்தின் பூஜை போடப்பட்ட போது நயன் தாரா, பிரச்சனை செய்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பின் போது பல கண்டீஷன்களை நயன் தாரா போடுவதாக தயாரிப்பாளர்கள் அவரை இந்த காரணங்களுக்காக தவிர்ப்பதாகவும் கூறப்பட்டது.

ரூ.30 லட்சம் சம்பளம்

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் அளித்த பேட்டியொன்றில் நயன் தாரா பற்றிய ஒருசில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், நயன் தாராவுடன் படப்பிடிப்பிற்கு நிறைய பவுன்சர்கள் பாதுகப்புக்காக வருகிறார்கள். அவர்களுக்கு துணையாக சிலர் பேர் வருகிறார்கள்.

இவர்களுக்கு செலவு மட்டுமே 30 லட்சத்திற்கும் மேலாகிறது. இதையும் தயாரிப்பு நிறுவனம் தான் செலவு செய்கிறது. அப்படி செலவு செய்து நயன் தாராவை வைத்து எடுக்கும் படங்கள் சரியாக ஓடவில்லை.

பவுன்சர்ஸ்களுக்கு ரூ.30 லட்சம் சம்பளம்!! அட்டூழியம் செய்யும் நயன்தாரா!! பிரபலம் சொன்ன ரகசியம்.. | Reason Why Producers Avoided Nayanthara Salary

அதனால் தான் இப்போது நயன் தாராவுக்கு பதிலாக மற்ற நடிகைகளை தேர்வு செய்கிறார்கள். ஈ படத்தின் போது நயன் தாரா ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தும், எந்நேரமும் அவருடன் போனில் பேசிக்கொண்டும் இருந்ததால் படப்பிடிப்பிற்கு தாமதானது. இதனால் கடுப்பான தயாரிப்பாளர் ஆர் பி செளத்ரி நயன் தாராவை கூப்பிட்டு நேரடியாகவும் திட்டிவிட்டார்.

அதன்பின் சரியாக நயன் தாரா படத்தில் நடித்து முடித்து சென்றார். அதன்பின் நயன் தாரா சொல்லும் அனைத்தையும் தயாரிப்பாளர்கள் சொல்ல ஆரம்பித்ததால் இப்போது எல்லைமீறி நடந்து கொள்கிறார். இப்போது பவுன்சர்களுக்கு சேர்த்து சம்பளம் கேட்பதால் தயாரிப்பாளர்களே அவரை ஒதுக்கி வேறொரு நடிகைகள் பக்கம் செல்கிறார்கள் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.