அந்த தொழில் செய்யும் பெண்ணாக நடிகை ரீமாசென்! நடிகருடன் ஒரேஒரு நெருக்கமான காட்சியால் இழந்த மார்க்கெட்!
தமிழில் காதலை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகி வெற்றியை கொடுத்துள்ளது. அப்படி 90களில் பிறந்த இளசுகளை தற்போது வரை மறக்கமுடியாமல் வைத்திருக்கும் படங்களில் ஒன்று மின்னலே.
ஆரம்பத்தில் நேபாளி, பெங்காலி, போஜ்புரி நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி தமிழில் மின்னலே படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கொடிகட்டி பறந்தவர் நடிகை ரீமா சென். முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ரீமாசென் பாலிவுட் பக்கம் சென்று 2012ல் திருமணமும் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சிறிது இடைவெளிவிட்ட ரீமாசென் தற்போது வரை படங்களில் எதும் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், 2004 ஆம் ஆண்டு பெங்காலி மொழியில் இடி ஸ்ரீகாந்தா என்ற படத்தில் விலைமாது பெண்மணியாக நடித்திருந்தார். பெரியளவில் பேசப்படாமல் இருந்த இப்படத்தில் ஒரேஒரு நெருக்கமான காட்சி நடிகருடன் இருந்துள்ளது.
இதை வைத்து பலர் விமர்சித்து வந்தனர். நல்ல கதை என்பதால் நடித்த என்னை அந்தமாதிரி பெண்ணாக நினைத்து கருத்துக்கள் வெளியாகி கஷ்டத்தை ஏற்படுத்தியது என்று சமீபத்தில் கூறியுள்ளார்.