பழிக்கு பழி வாங்கிய இயக்குனர் பாலா!! எழ முடியாமல் தவிக்கும் சியான் மகன் துருவ்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சியான் விக்ரம். இயக்குனர் பாலா இயக்கத்தில் பிதாமகன், சேது போன்ற படங்கள் விக்ரம் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது.

அப்படி தன்னை வளர்த்துவிட்டவரின் கதையில் விக்ரம் உயர்ந்தப்பின் நடிக்க முடியாமல் தவிர்த்து வந்தார். அதன்பின் தன் மகனை வைத்து விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் தன் மகன் துருவ் விக்ரமை நடிக்க வைக்க ஆசைப்பட்டார் விக்ரம்.
இந்த கதையை இயக்குனர் பாலாவிடம் முதலில் கொடுத்து வர்மா என்ற டைட்டிலில் இயக்க சொல்லி அதை தயாரித்தும் இருந்தார் விக்ரம். ஆனால் படத்தின் கதை போக்கில் பலவிதமான ஆபாச காட்சிகள் முகம் சுளிக்கும் காட்சிகள் அமைந்ததால் விக்ரம் அப்படத்தினை எடுக்க வேண்டாம் என்று பாலாவிடம் கூறிவிட்டார்.

தன் மகனின் முதல் படம் இப்படி இருந்தால் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இப்படத்தினை நீங்கள் வெளிடக்கூடாது என்று வேறொரு இயக்குனரிடம் கொடுத்து அர்ஜுன் ரெட்டி என்ற டைட்டிலில் எடுத்துள்ளார் விக்ரம். படம் ஓரளவிற்கு வெற்றிப்பெற்றது.
அந்த படத்தை பாலா மோசமாக எடுக்க காரணம் விக்ரம், வளர்ந்த பிறகு நன்றி விசுவாசம் இல்லாமல் நடந்து கொண்டதால் அவர் மகன் வாழ்க்கையில் இப்படியொரு சம்பவத்தால் பழிவாங்கிவிட்டாராம்.
இதன்பின் துருவ் விக்ரம் நடித்த மகான் படமும் தோல்வியை கொடுத்துள்ளது. தான் வளர்த்துவிட்ட நடிகரின் மகனுக்கு நல்வழிக்காட்டாமல் பழிக்கு பழி வாங்கி படுகேவலமாக நடந்து கொண்டுள்ளார் பாலா.