அந்த அறையில் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும்.. ரசிகர்களை மிரளவைத்த நடிகை பாவனா..

tamil actor flim cine bhavana
By Jon Jan 18, 2021 04:25 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத நடிகைகளாக சிலர் திகழ்ந்து வருவார்கள். அந்தவகையில் மலையாள நடிகைகளின் அணிவகுப்பும் தமிழ் சினிமாவில் அதிகரித்த நிலையில் அறிமுகமாகி அனைத்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பாவனா.

சுமார் 15 படங்களுக்கு மேல் நடிகையாக மலையாள சினிமாவில் நடித்த பிறகு தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதையடுத்து அடுத்தடுத்த சிறு பட்ஜெட் படங்களில் நடித்து கலக்கி வந்தார்.

முன்னணி நடிகைகளுக்கு இணையாக படவாய்ப்புகள் கிடைத்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் மலையாள நடிகர் ஒருவர் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தது தற்போதுவரை வழக்காக விசாரணையில் இருக்கிறது. சமீபத்தில் இதுதொடர்பாக பலரிடம் தீவிர விசாரணை நடந்து திலீப்பை சிறையில் அடைத்தனர்.

தற்போது, அந்த சம்பவத்தில் இருந்து நடிகை பாவனா முற்றிலும் வெளியேறி தற்போது படங்களில் நடித்து வருகிறார். ரீஎண்ட்ரி கொடுத்த நாளில் இருந்து மீண்டும் தன் மார்க்கெட்டை பிடிக்க ஆர்வத்தில் போட்டோஹுட் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில் சமீபத்தில் குளியலறை புகைப்படத்தினை வெளியிட்டு பாத்ரோப்பில் என் வாழ்க்கை எப்போதும் இருக்க வேண்டும் என்று பதிவினை பதிந்துள்ளார்.