ரூ. 32,500 கோடி சொத்து மதிப்பு!! ரூ. 639 கோடிக்கு வீடு வாங்கிய இளம் தொழிலதிபர்..
லீனா காந்தி திவாரி
இந்தியாவின் பணக்காரர்கள் லிஸ்ட்டில் டாப் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கே சவால் விடும் அளவிற்கு ஒரு தொழிலதிபதி ஒரு வியக்கவைக்கும் செயலை செய்துள்ளார். சுமார் ரூ. 32,500 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பினை வைத்துள்ள லீனா காந்தி திவாரி தான் அந்த தொழிலதிபதி.
ரூ. 639 கோடிக்கு வீடு
பிரபல மருந்து நிறுவனமான யுஎஸ்வி லிமிடேட்டின் தலைவரான காந்தி திவாரி, மும்பையின் வோர்லி பகுதியில் இருக்கும் இரட்டை அதி-ஆடம்பர கடல் நோக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளை ரூ.639 கோடிக்கு வாங்கியிருக்கிறார்.
மும்பையில் இந்தியாவின் மிக அதிக விலை கொண்ட வீட்டை வாங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் லீனா காந்தி திவாரி.
அந்த விலையுயர்ந்த வீட்டை வாங்க சுமார் ரூ. 63.9 கோடி முத்திரை வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்தி மொத்தம் ரூ. 703 கோடிக்கு அந்த குடியிருப்பை வாங்கியிருக்கிறார். 40 மாடிகள் கொண்ட இந்த குடியிருப்பில் 32 மாடியில் இருந்து 35வது மாடியில் கடற்கரை வியூ கொண்டதாகும்.