சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 3!! 3-வது Runner Up ரிக்ஷிதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப. சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் லிட்டில் சாம்பஸ் சீசன் 4 நிறைவு பெற்று தற்போது சீனியர் சீசன் 5 துவங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் டாப் 5 லிஸ்ட்டில் இடம்பிடித்த அனைவரும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று வருவார்கள்.
ரிக்ஷிதா ஜவஹர்
அந்தவகையில் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு 3வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தை பிடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் தான் ரிக்ஷிதா ஜவஹர்.
'அஞ்சலி அஞ்சலி' என்ற பாடலை மிகவும் சிறப்பாக பாடி பட்டித்தொட்டி எங்கும் வியந்து பார்க்க வைத்தவர் தான் ரிக்ஷிதா.
தற்போது தக் லைஃப் படத்தின் முத்த மழை பாடலை பாடி ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார்.