என் வீட்டிலும் நீட் தேர்வால் ஒரு தற்கொலை நடந்திருக்கிறது! நடிகை சாய் பல்லவி..
பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இதையடுத்து, தெலுங்கு, மலையாள படங்களில் பிஸியானார். மாரி 2வில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்து தமிழில் பிரபலமானார். சமீபத்தில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து லவ் ஸ்டோரி படத்தில் நடித்து சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் பிரபலங்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
நடிப்பதற்கு முன் மருத்துவராக பணியாற்றிய சாய்பல்லவி பேட்டியொன்றில் நீட் தேர்வு பற்றி கூறியுள்ளார். மருத்துவ படிப்பு ஒரு கடல் போன்றது, இதில் எங்கிருந்து கேள்விகள் கேட்கப்படும் என கூறமுடியாது. அதனால் மனதளவில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இதற்கு பெற்றொர்களும் நண்பர்கள் தேர்வெழுதுவோருடன் பேசி நம்பிக்கை தர வேண்டும். என் குடும்பத்திலும் ஒருவர் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டார்.
மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மன உளைச்சல் காரணமாக அவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அந்த முடிவை எடுத்துள்ளார். இத்தனைக்கும் மோசமான மதிப்பெண்ணே கிடையாது அவர் வாங்கியது.
தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று என்னால் சாதாரணமாக பேசிட முடியாது. ஆனால் அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தான் அந்த வலி தெரியும். எந்த நிலையில் அவர்கள் தேர்வு எழுதினார்கள் என்று பார்க்க வேண்டும். பதினெட்டு வயதில் ஒருவர் இதனால் தற்கொலை செய்து கொண்டார்கள் எனபது மன வேதனை அளிக்கிறது. எப்போது அவர்கள் பக்கம் தான் நான். அவர்களின் வலியும் பிரச்சனையும் நான் உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.