அதெல்லாம் பொய்.. நான் தான் First sorry கேட்டேன்!! உண்மையை பகிர்ந்த சைந்தவி.. Rewind
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக அதிர்ச்சி கொடுத்து வரும் செய்தி என்னவென்றால் ஜிவி பிரகாஷ் - சைந்தவியின் பிரிவு. மிகப்பெரியளவில் பேசப்பட்டு வரும் இவர்களின் பிரிவு செய்தி பற்றி பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். தேவையில்லாத கருத்துக்களை கூறுபவர்களை கண்டித்து கூட ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிக்கையை வெளியிட்டனர். இதுதொடர்பாக இணையத்தில் சைந்தவியின் பழைய பேட்டி வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
தற்போது ஒரு பேட்டியில் பாடகி சைந்தவி, ஜிவி பிரகாஷுடன் சண்டை போட்டு சமாதானம் ஆகும் விஷயத்தை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். சண்டையே போடமாட்டோம் என்பதெல்லாம் பொய். கண்டிப்பாக இருக்கும், சின்ன சின்ன சண்டைகள் தான், அந்த நிமிஷத்தில் இருவரில் யாராவது சிரித்துவிடுவோம்.
அப்படி நியாயம் வெச்சிக்கிற மாதிரி எதுவும் இல்லை. முதல் நான் தான் சாரி கேட்பேன். எனக்கு கோபத்துடன் தூங்க போகக்கூடாது. அன்றே சரி செய்துவிட வேண்டும். அடுத்த நாளிலாவது, சண்டைப்போட்டு பேசாமல் இருக்கக்கூடாது.
அதை என்னால் தாங்க முடியாது. அதற்காக, யார் சாரி கேட்டால் என்ன, சண்டையை முடித்துவிடலாம் என்று நினைத்து, நான் தான் சாரி கேட்டு விடுவேன் என்று சைந்தவி கூறியிருக்கிறார். அப்படி இருந்தவர்கள் எப்படி பிரிந்தார்கள் என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.