அந்த கேரக்டரில் நடிக்கமாட்டேன்.. வேண்டவே வேண்டாம்!! இயக்குனரிடம் கரார் காட்டிய நடிகை சமந்தா..
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வரும் சமந்தா, கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
இதற்கு காரணம் பலவிதமாக பேசப்பட்டு வந்த நிலையில், சமந்தா பல படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார். இடையில் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை மேற்கொண்ட போதிலும் படங்களில் பிஸியாகவும் நடித்து வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வரும் சமந்தா, பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஏற்கனவே வெப் தொடர் ஒன்றில் படுக்கை மற்றும் மோசமான காட்சியில் நடித்து வந்ததால் வாய்ப்பு குவியத்துவங்கியதால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் பட்டியல் அதிகரித்து வருகிறதாம். ஆனால் கதை விசயத்தில் கவனம் செலுத்தி சரியான கதை தேர்வு செய்கிறாராம். சமீபத்தில் ஒரு வேடத்தில் நடிக்க கேட்டு அதை நிராகரித்திருக்கிறார் சமந்தா. இயக்குனரும் நடிகருமான ஆர் ஜே பாலாஜி, சமந்தாவை சமீபத்தில் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
2020ல் நடிகை நயன் தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் எழுதி முடித்தப்பின் நயன் தாராவின் அம்மாவாக நடிக்க சமந்தாவை அணுகியிருக்கிறாராம். ஸ்கிரிப்ட் பிடித்தும் தேவதாசி வேடத்தில் நடிக்கமாட்டேன் என்று முடிவாக சமந்தா கூறியதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு காரணம், தன்னை அப்படி ஒரு வேடத்தில் பார்த்தவுடன் தன்னிடம் இருக்கும் கிளாமர், ரசிகர்களுக்கு பார்க்க ஆர்வமாக இருக்காது என்று சமந்தா கருதியதால் வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம். பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதால் இந்த வேடத்தில் நடிக்க நோ சொல்லியதாக கூறப்படுகிறது.