வெப் சர்ச்சை காட்சிகளுக்கு பிறகு கோடியில் புறளும் நடிகை ! இவங்க தான் டாப்பாம்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வரும் சமந்தா திருமணத்திற்கு பிறகும் பிஸி நடிகையாக வளம் வருகிறார். கொரோனா காலங்கள் என்பதால் வெப் தொடர்கள் அதிகரிப்பதை எண்ணிய சமந்தா தி பேமிலி மேன் 2 சீரியலில் நடித்திருந்தார்.
பல எதிர்ப்புகளுக்கு பிறகு அந்த வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பெரும்பாலும் நடிகை சமந்தா படங்களுக்கு 1.5 கோடியில் இருந்து 3 கோடிகளுக்கு உள்ளே தான் சம்பளத் தொகையாக வாங்கி வந்துள்ளார். ஆனால் தி பேமிலி மேன் வெப் தொடருக்காக நடிகை சமந்தா சுமார் 3 அல்லது 4 கோடி சம்பளம் வரை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
டாப் நடிகையானாலும் ஒரு வெப் தொடருக்காக ஒரு நடிகை 3, 4 கோடி வாங்குவதை நினைத்து ரசிகர்களும் திரையுலகினருக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாயிக்கு 2 சீசன்களையும் சேர்த்து 10 கோடி சம்பளமும், நடிகை பிரியா மணிக்கு 80 லட்சமும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.
இத்தொடர் மூலம் சமந்தாவின் மார்க்கெட் அதிகரிக்க செய்துள்ளதாம். நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் அந்த வெப் தொடரை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வெப் தொடரை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.