விஜய்யை கண்டித்தும் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்தார்!! விவாகரத்துக்கான காரணங்கள்...
நடிகர் விஜய், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி விவாகரத்து மனுவை செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது தற்போது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அப்படி சங்கீதா, என்ன என்ன காரணங்கள் கூறி விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார் என்று பார்ப்போம்..

விவாகரத்துக்கான காரணங்கள்
என் கணவர் விஜய், ஒரு நடிகையுடன் 2021ல் முதல் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார். இதனை நான் கண்டுபிடித்து, கண்டித்தும் தொடர்ந்து அந்த நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்தார்.
அவருடன் வெளிநாடு செல்கிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது அவர்கள் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருகிறார். அது எனக்கு அவமானத்தை தருகிறது.

2021 முதல் தன்னுடைய திருமணம், சமூக மற்றும் தொழில் வாழ்க்கையிலிருந்து முழுவதுமாக விலக்கி வைத்துவிட்டார். ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனியாக வாழ்ந்து வந்தோம். தற்போது 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.
என் குழந்தைகளையும் விஜய் கவனித்து கொள்ளவில்லை. அவரின் திருமணத்தை மீறிய உறவால் என் குழந்தைகளும் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் அவமானத்தை சந்திக்கின்றனர்.
அனைத்து தர்ப்பினரின் மதிப்பை கருத்தில் கொண்டு நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. தேவைப்படும் பட்சத்தில் அந்த நடிகையின் பெயரை 2வது எதிர் மனுதாராக சேர்ப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான காரணங்களுடன் சங்கீதா, விஜய் மீது விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.
மனு தாக்கல்










