அந்த விஷயம் என் தலையெழுத்தை மாற்றும்.. சரிகமப அபினேஷ் பேச்சு வைரல்
சரிகமப சீசன் 4
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வருகிறது. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4.
இந்த நிகழ்ச்சி முடிந்து இதன் டைட்டிலை திவினேஷ் தட்டிச்சென்றார். திவினேஷுடன் இந்த நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் பைனலுக்கு வந்தார்கள், அதில் ஒருவர் தான் அபினேஷ்.
அபினேஷ் பேட்டி
தற்போது அபினேஷ் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், " நான் சரிகமப நிகழ்ச்சி செட்டை மிஸ் செய்கிறேன்.
பைனல் முன்பு என்னை தேவா சார் பாராட்டி இருந்தார், அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த கீபோர்டை நான் பொக்கிஷமாக வைத்துள்ளேன்.
அந்த கீபோர்ட் வைத்து நான் மியூசிக் டைரக்டர் ஆகனும் என வாழ்த்தினார். அவருடைய கையெழுத்து என் தலையெழுத்தை மாத்தும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.