10 லட்சம் என்ன பரிசு!! எங்க அம்மா தினமும் அழுறாங்க.. கண்கலங்க வைத்த சரிகமப திவினேஷ்..
சரிகமப லிட்டில் சாம்ஸ் 4
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்நிகழ்ச்சியில் லிட்டில் சாம்ஸ் சீசன் 4 சமீபத்தில் தான் நிறைவடைந்தது.
சரிகமப லிட்டில் சாம்ஸ் 4ன் டைட்டில் வின்னராக சிறப்பாக பாடி அசத்திய திவினேஷ பெற்றார். தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளனர்.
திவினேஷ் பேட்டி
சமீபத்தில் திவினேஷ் அளித்த பேட்டியொன்றில், பரிசு தொகை 10 லட்சம் கிடைத்ததை என்ன செய்யப்போகிறாய் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதில் திவினேஷ், இந்த பணத்தை வைத்து தன் குடும்ப கடனை அடைக்கப்போகிறேன் என்றும் இந்த பணத்தை வைத்து கடன் அடைக்கனும்னு அம்மா சொன்னது கிடையாது, ஆனால் என்னுடைய அம்மா தினமும் கடனை நினைத்து அழுதுட்டு இருப்பாங்க.
அதை பார்த்து எனக்கு இந்த பணத்தை வைத்து கடனை அடைக்கனும், அம்மாவுக்கு நகை வாங்கி போடணும் என்று தோன்றியதாக திவினேஷ் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே, தன் அப்பா கஷ்டப்படுவதை நினைத்து சரிகமப நிகழ்ச்சியில் உருக்கமாக பேசியதால், நடுவர்கள் திவினேஷ் தந்தைக்கு டாடா ஏசி வாங்கி கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.