சரிகமப சீனியர் 5ல் இலங்கை மலைவாழ் தமிழர் சினேகா!! உருக்கமான வீடியோ..
சரிகமப சீனியர் 5
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப.
சமீபத்தில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 நிகழ்ச்சி நிறைவு பெற்றநிலையில், தற்போது சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது.
இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்துள்ளது. அந்த எபிசோட்டில் பாடிய பல போட்டியாளர்கள் நடுவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தனர்.
இலங்கை மலைவாழ் தமிழர் சினேகா
ஏற்கனவே 3 இலங்கை தமிழர்கள் சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது மேலும் ஒரு இலங்கை போட்டியாளர் கலந்து கொண்டிருக்கிறார்.
இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் மலைவாழ் மக்களில் ஒருவரான சினேகா என்பவர் தான் அந்த போட்டியாளர்.
அங்குள்ள மலைவாழ் மக்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை கொடுத்து தான் சினேகாவை சரிகமப நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். சினேகாவின் பேச்சை கவனித்த விஜய் பிரகாஷ், அவரின் திறமையை பார்த்து செலக்ட் செய்துள்ளார்.