சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 டைட்டில் வின்னர் திவினேஷ்!! டி ராஜேந்தர் கொடுத்த பரிசு..
சரிகமப சீனியர் சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்நிகழ்ச்சியின் சீனியர் 5 நிகழ்ச்சி தற்போது மெகா ஆடிஷனுடன் ஆரம்பமாகியுள்ளது.
பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு நடுவர்களையும் ரசிகர்களையும் உருக வைத்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் திவினேஷும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
லிட்டில் சாம்ஸ் 4 டைட்டில் வின்னர் திவினேஷ்
சரிகமப சீனியர் சீசன் 5 மேடையில் பாடிய திவினேஷ் நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினரான டி ராஜேந்தர் அவர்களையும் தன் குரலால் உருக வைத்திருக்கிறார். மேடைக்கு வந்த டி ராஜேந்தர், நான் பேசும் இடத்தில் வாயடைத்து போயிருக்கிறேன்.
சின்ன பசங்களுக்கு திறமை வருமான்னா வரும்னு தெரியும், ஆனா இந்தளவிற்கு வரும் சொன்னால் தெய்வ சக்தியை தவிர மனித சக்தியாக இருக்க முடியாது.
இந்த குழந்தையை பெற்றெடுத்த தாய் தந்தை, அவர்கள் செய்த பூர்வபுன்னியம் தான் இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கு. நீ ஆயிரத்தில் ஒருவன் என்று கூறி ஒரு தொகை ரூபாயை பரிசாக அளித்துள்ளார் டி ராஜேந்தர்.