சரிகமப சீனியர் 5!! மீண்டும் விசா சிக்கலில் சுவிஸ்வாழ் இலங்கை தமிழர் பிரஷான்..வீடியோ...
சரிகமப சீனியர் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்நிகழ்ச்சியில் ஜூனியர் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த மே 11 ஆம் தேதியோடு நிறைவடைந்தது.
டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளனர்.
இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மே 24 ஆம் தேதி முதல் ஆரம்பமானது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டி ராஜேந்தர் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து தற்போது Introduction Round கடந்த வாரம் முதல் நடைபெற்றது.
இலங்கை தமிழர் பிரஷான்
இந்நிலையில், போட்டியாளர் பிரஷான், இலங்கை குடியுரிமை இல்லாமலும், சுவிஸ் குடியுரிமை இல்லாமலும் 30 நாள் விசாவில் இந்தியா வந்து சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியில் பாடியிருப்பது அனைவரது மனதையும் உருகவைத்திருந்தார்.
இந்த வாரம் வந்த பிரஷான், மீண்டும் விசா விஷயத்தில் பிரச்சனை என்றும் திரும்பவும் சுவிஸ் சென்று விசா விஷயமாக பேசவேண்டும். அதனால் மீண்டும் வருவேனா இல்லையா? என தெரியாது.
நீங்கள் அப்படி நான் வந்தால் நீங்கள் என்னை மீண்டும் ஏற்றுக்கொள்வீர்களா? என்றும் தெரியாது என்று கூறி பிரஷான் உருகவைத்திருக்கிறார். இதற்கு நடுவர்கள், ஸ்பெஷல் ஜூரி, போட்டியாளர்கள் உட்பட பலரும் பிரஷான் மீண்டும் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று கூறி அனைவரையும் நெகிழவைத்திருக்கிறார்கள்.