IPL மேட்ச் பார்க்க சென்ற இடத்தில் புகைப்படம் வைரல்- திருமணம் ஆகிவிட்டதா சீரியல் நடிகை விளக்கம்
கிரிக்கெட்
தமிழ் மக்களையும் கிரிக்கெட்டையும் எப்போதும் பிரிக்க முடியாது. எந்த விளையாட்டை அதிகம் பார்க்கிறார்களோ இல்லையோ, கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இப்போது IPL 2024ம் ஆண்டிற்கான போட்டி நடந்து வருகிறது. அண்மையில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
இந்த போட்டியை காண வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
சமீபத்திய போட்டியில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பார்த்த நட்சத்திரங்களில் ஒருவர் தமிழும் சரஸ்வதியும் சீரியர் புகழ் தர்ஷனா. தற்போது இவர் பூவா தலையா என்ற சன் டிவி சீரியலில் நடித்து வருகிறார்.
அவர் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் திடீரென வைரலாக அதைப்பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.
அதாவது அந்த போட்டோவில் அவரது கழுத்தில் தாலி போன்ற மஞ்சள் கயிறு இருந்ததை பார்த்து ரசிகர்கள் திருமணம் ஆகிவிட்டதா என ஷாக் ஆகிவிட்டனர்.
ஆனால் உண்மையில் அது தாலி இல்லையாம், விசில் கயிறு தானாம். தனது புகைப்படம் திடீரென இப்படி வைரலானது சத்தியமாக தான் எதிர்ப்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.