என் அம்மாவுக்கே கால் செய்து அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண கேட்டாங்க!! ஓப்பனாக பேசிய நடிகை சம்யுக்தா..
சின்னத்திரை சீரியல் நடிகையாக பிரபலமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகை சக்யுக்தா, கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்தவர் தன்னை ஏமாற்றியதாகவும் கொடுமைப்படுத்தியதாகவும் கூறி பல பேட்டிகளில் கதறியபடி பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள சம்யுக்தா ஒருசில சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டது பற்றி பகிர்ந்துள்ளார். அதில், என்னிடம் சீரியலில் இருந்து அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய அழைக்கவில்லை. படங்களில் நடிக்க 3 முறை அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டிருக்கிறார்கள். மூன்று படங்களின் வாய்ப்பு வந்தது மூன்றிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டார்கள். இரண்டு கால் நான் அட்டெண்ட் பண்ணினேன், நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். ஒரு கால் என் அம்மாவுக்கே கால் செய்தார்கள்.
காஸ்டிங் இயக்குனர்களிடம் என் நம்பரும் என் அம்மா நம்பரும் கொடுப்பேன். அப்படி அம்மாவுக்கு பெரிய ஹீரோவின் பெரிய கம்பெனி படத்தில் இருந்து கால் வந்தது. சம்பளம் எல்லாமே பேசினது, எங்கே வரனும் ஆடிஷன் பண்ணனுமா என்று என் அம்மா கேட்டிருக்கிறார்.
ஆடிஷன்லாம் பண்ண வேண்டாம், அட்ஜெஸ்ட் பண்ணிங்கன்னா அடுத்த நாளே ஷூட்டுக்கு போய்டலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் அம்மாவுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் என்றால் என்ன என்று புரியவில்லை. இன்னொரு முறை அப்படி கேட்டதும் புரிந்த பின் வேண்டாம் என்று அம்மா கேட்டார்கள் என்று சம்யுக்தா ஓப்பனாக பேசியிருக்கிறார்.