சர்ச்சை கதையில் விஜயகாந்த் மகன்!! இப்படி ஒரு பிரச்சனை நடந்ததா..
நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்தின் மறைவு, நம்மில் பலரையும் பாதித்துவிட்டது. இன்னும் பலர் அந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் இருந்து வருகின்றனர்.
விஜயகாந்தின் மகன், பிரபாகரன் முழுக்க முழுக்க அரசியலும் கவனம் செலுத்துகிறார், சண்முக பாண்டியன் முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது அவர் மித்ரன் என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் இயக்குனருமான நடிகருமான சசிகுமார் குற்றபரம்பரை நாவலை வெப் தொடராக எடுக்க இருப்பதாகவும், அதில் ஹீரோவாக சண்முக பாண்டியன் நடிக்க போகிறார் என்று தகவல் வெளியானது.
பிரபல எழுத்தாளர் வேலராம மூர்த்தி எழுதிய இந்த நாவலை, முன்னதாக இயக்குனர் பாரதிராஜா இயக்க இருந்தார். பாலாவும் இந்த நாவலை எடுக்கப்போவதாக அறிவித்தார். இதனால் பாலா பாரதிராஜா இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் இந்த பிரச்சனை சுமுகமாக முடிந்தது குறிப்பிடத்தக்கது.