சகோதரி கணவருடன் கள்ளத்தொடர்பு! ஷாக் கொடுத்த நடிகை ஷில்பா செட்டியின் கணவர்
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஷில்பா செட்டி. 46 வயதான நடிகை ஷில்பா 2009ல் ராஜ் குந்த்ரா என்பவருக்கு இரண்டாம் மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் மூன்று குழந்தைகளுடன் தற்போது வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஷில்பா செட்டியின் கணவர் ராஜ் ஒரு அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளார். அதாவது தன்னுடைய முதல் மனைவி கவிதாவுடன் திருமணம் செய்து லண்டனில் செட்டில் ஆனோம். தன்னுடைய சகோதரி ரீனாவின் கணவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் அவரை விவாகரத்து செய்தேன். இதையடுத்து ஷில்பா செட்டியை காதலித்து திருமணம் செய்தேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ஷில்பா செட்டியால் தான் என் கணவர் விவாகரத்து செய்தார் என்று காரணத்தை கவிதா வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். அதற்கு ராஜ் குந்த்ரா முதல் மனைவி கவிதாவை பிரிய ஷில்பா செட்டி காரணமில்லை என்றும் அவர் என்னுடைய சகோதரி கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் தான் விவாரத்து பெற்று பிரிந்தேன் என்று குறிப்பிட்டார்.
இந்த விவரம் குறித்து ஷில்பா செட்டி கூறியது, நான் ராஜ் குந்த்ராவை சந்தித்த போது அவருக்கு விவாகரத்து பெற்று 4 மாதங்கள் ஆனது. எந்த வகையில் அதற்கு நான் காரணமில்லை என்று கூறியுள்ளார் ஷில்பா செட்டி.