காதலரை ரகசிய திருமணம் செய்து கொண்டேனா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல் மகள் ஸ்ருதி ஹாசன்
உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். ஒரு பேட்டியொன்றில், எனக்கு இருந்த மோசமான குடிப்பழக்கத்தை நான் இப்போது விட்டுவிட்டேன். இப்போது நான் தெளிவாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் பிரஸ் மீட்டில் ஒரு ரிப்போர்ட்டர் ஸ்ருதி ஹாசனிடம், தம் அடிக்கும் பழக்கம் இருக்கா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் அதெல்லாம் என்னங்க, சொல்லிட்டா இருப்பாங்க, இருக்க தான் செய்யும், என்னுடைய சுதந்திரம் அது, ஆனால் இப்போது விட்டுவிட்டேன் என்று கூறி இருந்தார்.
ரகசிய திருமணம்
இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசனுக்கும் அவரது காதலர் சாந்தனுவுக்கு ரகசிய திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம், பாலிவுட் பிரபலமாக திகழும் Orhan Awatramani என்பவர்தான். ஓரி என்று அழைக்கப்படும் இவரிடம் ரசிகர்கள், போட்டோவிற்கு போஸ் கொடுங்கள் என்று கூறினால் எந்த பிரபலமாவது அதிக ஆட்டிடியூட் காட்டுவார்களா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு ஓரி, ஸ்ருதி ஹாசன் பெயரை குறிப்பிட்டு, போட்டோவிற்கு போஸ் கொடுக்காததற்கு இல்லை, ஒருமுறை என்னிடம் அவர் கடுமையாக நடந்து கொண்டதாகவும் எனக்கு அவரை முன்பின் தெரியாது, என்னை நடத்தியவிதம் மோசமானதாக இருந்தது.

விவாகரத்தாகி 11 ஆண்டுகளுக்குப்பின் இரண்டாம் திருமணம்!! சாண்டியின் முதல் மனைவி காஜல் வெளியிட்ட புகைப்படம்..
ஆனால் அவரது கணவர் சாந்தனுவுடன் எனக்கு நல்ல பழக்கம், அவரை மதிக்கிறேன், சரியாகிவிடும் என்று கூறினார். மேலும் ஸ்ருதி ஹாசன் தன்னை ஒரு ஸ்பாட் பாய் என்று அழைத்ததாகவும் சில ஆன்லைன் வதந்திகள் மூலம் தெரிந்து கொண்டதாக ஓரி கூறியிருந்தார். அவர் ஸ்ருதி ஹாசனின் கணவர் சாந்தனு என்று கூறியதால் தான் ஸ்ருதி ஹாசன் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஸ்ருதி ஹாசன் மற்றும் சாந்தனு
இதற்கு நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் சாந்தனு ஒரு பதிவினை பகிர்ந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். நான் இன்னும் திருமணம் செய்யவில்லை என்றும் சின்னசின்ன விசயங்களையும் வெளிப்படையாக காட்டும் நான் இதை ஏன் மறைக்க வேண்டும் என்னை தெரியாதவர்கள் பொறுமையாக இருங்கள் என்று ஸ்ருதியும், நீங்கள் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் திருமணம் செய்யவில்லை யாருக்கும் எங்களை பற்றி தெரியாதோ இந்த மாதிரியான வதந்திகளை பரப்புவதை நிறுத்தங்கள் என்று சாந்தனும் கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இதுபோல் ஏன் ஒருவரின் திருமணம் விசயத்தில் வதந்திகளை பரப்பி குழப்ப வேண்டும் என்று ரசிகர்கள் ஓரி-ஐ விமர்சித்து வருகிறார்கள்.
