எந்நேரமும் போதை ஊசி போட்டு கும்மாளமாக இருந்த நடிகை! மருத்துவர் சகவாசத்தால் ஏற்பட்ட பரிதாபம்?
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சுமார் 450 படங்களுக்கும் மேல் நடித்து வந்தவர். வறுமை கோட்டிற்கு கீழ் இருந்து சென்னையில் பிழைப்பதற்காக வந்தவர் சில்க் ஸ்மிதா. இந்நிலையில் அவர் பற்றி பல தகவல்களை சமீபத்தில் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
மருத்துவர் ஒருவரின் சகவாசத்தால் போதை ஊசி பயன்படுத்த ஆரம்பித்தார். எப்போது வேண்டுமானாலும் அந்த ஊசியை பயன்படுத்த ஆர்வத்தை தூண்டினார் அந்த டாக்டர். அவரை நான் பார்த்து பேசும் போதெல்லாம் போதையில் தான் பேசுவார் என்று கூறியுள்ளார்.
மேலும் சாப்பிடுவதற்கு முன்பு பான் பராக் போடுவதையும் சில்க் ஸ்மிதா வழக்கமாக கொண்டிருந்தார். இதுதவிர்த்து மதுவும் அருந்தி தனது வாழ்க்கைக்கே அது மரணமாக இருந்தது என்று கூறியுள்ளார்.