மறைந்த இயக்குநர் படத்தை தூக்கி எறிந்த சிம்பு! மூத்த நடிகையின் மகள் தான் காரணமா?
தமிழ் சினிமாவில் வார்சு நடிகராக சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய தந்தையால் அறிமுகம் செய்யப்பட்டார் நடிகர் சிம்பு. சிலம்பரசன் என்று ஆரம்பித்த சிம்புவின் பெயர் தற்போது எஸ் டி ஆர் என்ற உயரத்தை கொடுத்தது அவரின் வெற்றிப்படங்கள்.
அந்தவகையில் தயாரிப்பாளருக்கு ஒரு தலைவலி நடிகராக திகழ்ந்து தற்போது சமத்து பிள்ளையாக படப்பிடிப்பை முடித்து கொடுத்து வருகிறார். ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக மாநாடு படம் வெளியாக உள்ளது.
அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் சிம்பு சில ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ படத்தில் நடித்து பின் சில காரணங்களால் விலகியது தெரிந்த ஒன்றே. அதற்கு பிறகு நடிகர் ஜீவா நடிக்க ஒப்புக்கொண்டு பெரிய ஹிட் கொடுத்தது அந்த படம்.
அந்த படத்திலிருந்து சிம்பு விளங்குவதற்கு காரணம் பிரபல நடிகை ராதாவின் மகள் கார்த்திகா தானாம். சிம்பு நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா போன்ற ஹீரோயின்களை எதிர்பார்த்து அந்த படத்தில் நடித்தாராம். ஆனால் திடீரென அறிமுக நடிகை என்றதும் சில நாட்கள் தலையெழுத்தே என்று நடித்துவிட்டு பின்னர் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று விலகி விட்டதாக கூறியுள்ளனர்.